Sunday, June 27, 2010

டீச்சர் .......(சிறுகதை)

பாடசாலை விட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்த வாசுகி டீச்சருக்க்கு ஓங்கி வீசிய கச்சான் காற்றும் அதன் வெக்கையும் அவஸ்தையாய் இருந்தன.வழமையாக பஸ்ஸில் வரும் டீச்சர் சற்று தாமதித்ததால் பஸ்ஸை தவற விட்டு விட்டார்.ஆட்டோவில் வந்து இருக்கலாம்,ஆனால் அவர் இயன்றளவு பணத்தை வீண்செலவு பண்ணமாட்டார்.

வீட்டுப் படலையைத் தொட்ட போதுதான் டீச்சர்ருக்கு நிம்மதிப் பெருமூச்சி வந்தது.மகன் இன்னும் வீடு வர வில்லையென படலையே பதில் சொன்னது.மகன் திவா படலை மூடி வந்ததாக சரித்திரம் இல்லை.

தான் வரவே தாமதம்,ஏன் திவா வரவில்லை என மனம் மீண்டும் பதறத்தொடங்கியது.உள்ளே போய் வாளிக்குள்ள இருந்த தண்ணீரைக் குடித்து வறண்ட தொண்டையை குளிர்வித்துக்கொண்டு சேலை மாற்ற அறைக்குள் நுழைய “டீச்சர் ! என்ற கம்மிய குரல் மீண்டும் படலைக்கு அழைத்தது.

வந்து  பார்த்த போது தன்னிடம் படிக்கும் 7ம் வகுப்பு மாணவன் ராகுலன் தலை குனிந்து கொண்டு நின்றான்.என்னப்பா ? “என்றார்.அவன் வார்த்தை வராமல் திணறிக்கொண்டிருந்தான்.நீண்ட போராட்டத்தின் பின் “டீச்சர் உங்கட மகனை சந்திக் கடையில பிடிச்சு வச்சிருக்காங்க.கொஞ்சம் வாங்க “ என்றான்.டீச்சருக்கு ஏன் ,எதற்கு ,யார் என்றெல்லாம் கேள்வி கேட்கத் தோணவில்லை.காலிலே செருப்பும் போடாமல் அந்தப் பையனைப் பின்தொடர்ந்தார்.

கடை வாசலை அடையும் போது அதைச் சூழ்ந்து சிறிய கூட்டம்.பல நீதிபதிகள் தான் தோன்றித்தனமாக அறிக்கை விட்டுக்கொண்டுருக்கிறார்கள்.திவாகரோ கண் கலங்கி கை கட்டிக்கொண்டு கொண்டு நிற்கிறான்.அவனோடு சேர்ந்து மொத்தம் 3 பசங்க.அனைவரும் 10 வகுப்பு.டீச்சரைக் கண்ட போது “இவன் உங்க பையனா? “என்று அதட்டிய அந்த கடை முதலாளி திவாவின் தோளைப் பிடித்து தள்ளினான்.அவன் அப்பா இறந்ததில் இருந்து அவனை நோக்கி கையோங்கி இருக்காத வாசுகிக்கு அதைப் பார்க்க கண் கலங்கியது.ஆமா ....என்று குற்றவாளி போல தலையாட்டினாள்.இவனுகள் என்ன பண்ணாங்க தெரியுமா ?எண்டு மீண்டும் உறுமினான்.வாசுகி மிரண்ட கண்களால் அவனைப் பார்த்தாள்.நான் இருக்கும் போதே திருடுப்பசங்க களவு எடுக்கிறாங்க.அப்படியே போலீசில ஒப்படைச்சு இருப்பன்.பள்ளி உடுப்பு வேறு.எல்லாம் இதுகள பெத்ததுகள சொல்லணும்.ஒழுங்கா வழத்தா ஏன் இப்படி அலையுதுகள் என்று அத்தனை பேர் முன்னாள் வாசுகியை அசிங்கப்படுத்தி சுற்றி நிற்பவர்கள் முன்னாள் தன் வீரத்தை காட்டினான்.


திவாவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.தன்னை வளர்க்க தன் தாய் பட்டபாட்டிற்கு நான் இப்படியா கௌரவம் சேர்த்துக்கொடுக்க வேண்டும்.அவனது மனசாட்சி அவனைக் கேள்வி கேட்டது.


அப்பொழுது கூட்டத்தில் இருந்த சில பெண்களின் குரல் தெளிவாகக் கேட்டது வாசுகிக்கு.இந்த டீச்சர் எல்லாம் படிப்பிச்சா ,நல்லா உருப்படும் பள்ளி.............



இதற்கு மேலும் சொல்லம்பு தாங்கும் சக்தி வாசுகிக்கு இருக்க வில்லை. ஐயா ! இந்த ஒருதடவை மட்டும் மன்னியுங்க.இனி மேல் இப்படி ஒரு தவறு நடைபெறாது.இவங்க எதை எடுதான்களோ சொல்லுங்க? ,நான் பணத்த கொடுத்திறன்.நடந்த சம்பவத்துக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறன்.ஒரு பெண்ணா என்னுடைய நிலைய கொஞ்சம் நினைத்துப் பாருங்க எண்டு தன் வாழ்வில் முதல் முதலாக தன் பிள்ளைக்காக கையேந்திக்கொண்டு நின்றாள்.

சற்று யோசிச்ச முதலாளி உங்க பையனை மட்டும் கூட்டிப்போங்க.மற்றவங்களுக்கு அதுகளப்பெற்றது வரட்டும் என்றான்.அதற்கு வாசுகி டீச்சர் “இல்லை ஐயா,மற்றவர்களும் எண்ட பள்ளியில் படிக்கிறவங்க தான்.அவங்களுக்கும் நான்தான் பொறுப்பு “, என்றாள் மெதுவாக.இனி என்ன நடந்தாலும் நீங்கதான் பதில் சொல்லவேண்டும் என்றவாறு மூவரையும் போக அனுமதிதான் முதலாளி.அப்பொழுது திவாவின் நண்பன் தன் கையில் இருந்த “மிக்ஸர்ஐ மெதுவாக கதிரையில் வைத்தான்.



யாரிடமும் எதுவும் பேசாமல் டீச்சர் முன்னாள் நடக்க நான்கு பேர் அவரை நோக்கி நடந்தனர்.அப்பொழுது டீச்சரை அழைத்து வந்த ராகுலன் “டீச்சர் நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க.உங்களைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும்.உங்கட வயிற்றில பிறந்த மகன் கண்டிப்பாகத் திருடமாட்டான்.என்று சொல்ல டீச்சர் கண்ணால் வடிந்த கண்ணீரோடு மற்றைய மூவரையும் பார்த்தார்.

மூவரும் வீதியிலே டீச்சரின் காலில் விழுந்து “அம்மா இனி வாழ்கையில எப்பவுமே களவு எடுக்க மாட்டம்,இது சத்தியம் என்றனர்.

அப்பொழுது வாசுகிக்கு தன் பிள்ளையோடு சேர்த்து மூவருக்கு நல்வழிப் படுத்திய திருப்தி நெஞ்சில் ஒட்டிக்கொண்டது.

Saturday, June 19, 2010

பக்குவம்...............(ஒருபக்கக்கதை)



அன்று ஒரு வெள்ளிக்கிழமை,புகைவண்டிக்குள் ஏறிய ஜீவனுக்கு சற்று ஏமாற்றம்.வழமைக்கு மாறாக பயணிகள் அதிகம்.ஒரு காலியான ஆசனமும் இல்லை.ஒவ்வொரு பெட்டியாகத் தேடிக்கொண்டு இருந்த போது ஒரு நீண்ட ஆசனத்தில் மூன்று இளைஞர்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.அவர்களைக் கடந்து சென்ற போது “உஷ்ஷ்ஷ்....என்று அழைப்பு.அழைப்பில் மரியாதை இருக்கவில்லை.ஆனாலும் வேண்டா வெறுப்புடன் திரும்பிப் பார்க்க அந்த இளைஞரில் ஒருத்தன் நீங்க விரும்பினால் அட்ஜஸ்ட் பண்ணி உட்காரலாம் என்றான்.இந்த வாய்ப்பை விட்டால் பத்து மணித்தியாலம் நிற்க வேண்டும் அல்லது தரையில் அமரவேண்டும்.உடனே அவன் அருகில் சென்று அமர முயல மற்றைய இருவரும் விருப்பமின்றி  சற்று இடம் கொடுத்தனர்.ஜீவனும் கூச்சமாய் அமர்ந்து கொண்டான்.


அமர்ந்து சற்று நேரத்தில் அவர்கள் சம்பாஷனையில் ஜீவனும் அங்கமாகி விட்டான்.இடம் கொடுத்தவன் திறந்த புத்தகமாக பேச ஆரம்பித்தான்.அவன் பெயர் தனேஷ்.மற்றவர்கள் முகுந்தன்,கண்ணா.மூவரும் வயலில் வேலை செய்யும் வாலிபர்கள்.முகத்தில் தோன்றிய வறுமையும் உரமேறிய உடலும் அதை நிரூபித்தன.
தனேஷின் உறவுக்காரர் ஒருத்தர் துபாயில் வேலை செய்து விட்டு விடுமுறைக்கு ஊர்வந்து இருக்கிறார்.அவருடைய ஆலோசனையின் பெயரில் அங்கு சென்றால்  நன்றாக உழைக்கமுடியும் என்ற கனவில் இவர்கள் துபாய் போவதற்காக கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
தனேஷிடம் பேசும் போது அவன் சொன்ன தகவல்கள் வியப்பை ஏற்படுத்தின ஜீவனுக்கு.அவனுக்கு வயது 21,ஒரு குழந்தை வேறு.ஓடிப்போய் திருமணம் செய்ததாகச் சொன்னான்.கையில் ஒரு சீனா போன் வைத்திருந்தான்.பார்க்கத் தரும்படி கேட்டான் ஜீவன்.அதில் அவனது குழந்தையின் படம் இருக்கும் என்று தேடிய ஜீவனுக்கு திரிஷாவையும்  நயன்தாராவையுமே பார்க்கக் கிடைத்தது.மனைவி பிள்ளையின் படம் ஒன்றும் போடவில்லையா?,போட்டு இருந்தா ஊர்ல இல்லாட்டியும் முகத்தையாவது பார்த்துக்கொள்ளலாமே “ என்றான் ஜீவன்.அவன் அப்பாவியாக சிரித்தான்.அவனது வறிய முகமும் அப்பாவிப் பேசும் அவனைப் பற்றி மேலும் அறிய ஆவல் தூண்டியது ஜீவனுக்கு.
“வெளிநாட்டுப் பயணத்திற்கு பணத்திற்கு என்ன செய்தாய் என்றான்?”.10% வட்டிக்கு பணம் வாங்கினேன் என்றான் அவன் சர்வசாதாரணமாக.ஜீவனுகோகோ உடம்பு பதறியது.குடும்பத்தை விட்டு வட்டிக்கு பணம் வாங்கி வெளிநாடு போகவேண்டிய அவசியம்தான் என்ன ? என்றான்.நான் யுத்தத்தில இடம் பெயரும் போதே படிப்ப விட்டுவிட்டன்.எண்ட படிப்புக்கு நான் செய்யக்கூடியது அறுவடை வேலையும்  கூலி வேலையும் தான்.இரண்டும் நிரந்தரம் இல்லை.இந்தப் பூமியில ஆயுள் பூராக உழைத்தாலும் எண்ட நிலைமை மாறது.அதைவிட கடனைப் பட்டாவது வெளிநாடு போய் வந்தா காசும் சேரும் கௌரவமும் கிடைக்கும் என்றான் தனேஷ்.

திடீர் என்று நிமிர்ந்து பார்த்துச்சிரித்தவன் எனக்கு ஒரு இலட்சியம் இருக்கு என்றான்.ஜீவனும் ஆவலாக என்ன என்ன என்றான்.ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி ஓடணும்,அதோட மூன்று வேளைச் சாப்பாடு இருந்தா அதுபோதும்  என்றான்.ஜீவனுக்கு கோவம் தான் வந்தது.உன்னைப்பற்றி மட்டும் தான் யோசிப்பாயா?குடும்பம் பற்றி கவலையே இல்லையா என்றான்.ஜீவனை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு எண்ட ஆசைக்குத்தானே முன்னுருமை என்றான்.21 வயதில் குடும்பஸ்தன் ஆகிவிட்டால் இப்படிதான் ,காலம் பாடம் கற்பிக்கும் என்றான் ஜீவன் சூடாக.அதற்கும் அவன் வெகுளியாய் சிரித்துக்கொண்டு இருந்தான்.

Sunday, June 13, 2010

மூளையைச் சுறுசுறுப்பாக்க portable game

மூளையைச் சுறுசுறுப்பாக்க சுடோகு(SUDOKU) விளையாட்டு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.அத்துடன் இவ்விளையாட்டின் விதிமுறைகள் மிகவும் இலகுவானதாகும்.


அடிப்படை





இந்த விளையாட்டு தளமானது கிடையாக 9 பெட்டிகளையும் நிலைக்குத்தாக 9 பெட்டிகளையும் கொண்டுயிருக்கும்.மொத்தமாக 81 பெட்டிகள் காணப்படும்.9 பெட்டிகள் கொண்ட கட்டமாக   9 கட்டங்கள் காணப்படும்.அவர்கள் சில பெட்டிகளை  நிரப்பித்தருவார்கள்.மீதியை நாம் நிரப்ப வேண்டும்.


விதிமுறை



கிடையாக 1 இருந்து 9 வரை வரவேண்டும்.அதே போன்றும் நிலைக்குத்தாகவும் 1 இருந்து 9 வரை வரவேண்டும்.அத்துடன் ஒவ்வொரு கட்டத்தினுள்ளும் 1 இருந்து 9 வரை வரவேண்டும்.ஆக இவ்வளவும் தான் விதி.


அனுகூலம்

விளையாட ஒரு தாளும் ஒரு பேனாவும் போதுமானது.கணணி திரையை தொடர்ந்து பார்க்கப் பிடிக்காதவர்களுக்கு இது பெரிய நன்மை.சுவாரசியம் பிடித்து விட்டால் கீழுள்ள நிலைமைதான்.






தரவிறக்க


தரவிறக்க கிளிக்கவும்.இது ஒரு போர்டப்ல் மென்பொருள்.உங்கள் பென் டிரைவ் இல் வைத்திருந்தால் எந்தக்கனனியிலும் விளையாடிக்கொள்ளலாம்.


Friday, June 11, 2010

என்காதல் சொல்லி ஒருவாரம்


இன்றோடு என்காதல் சொல்லி ஒருவாரம்
இருப்புக்கொள்ளவில்லை – மனசுக்குள்
அவளுக்கு வகுப்பு விட இன்னும் பத்து நிமிடம் இருக்கு
எனக்கு ஆபீஸ் முடியவோ ஒரு மணித்தியாலம் இருக்கு
இன்று அவளை தவற விட்டால்
அவள் இரடைப்பின்னல் காணாது - மீண்டும்
இரட்டைக்கோபுரம் சாய்ந்து விடும் எனக்கு
மனம் மட்டும் இல்லை – இதயமும்
அவளைக்காணாது குருதியை பம்ப மறுத்தது 

காதலை ஏற்றி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு
அனுமதி கேட்டேன் என்ஜினீயரிடம்
அவர் புன்னகைத்தார்
நான் காற்றில் கலந்து படலை தாண்டினேன்.

வகுப்பு முகப்பில் நான் காவல் தெய்வமானேன்
என் தலைக்கறுப்புக் கண்ட அவள் நண்பிகள்
அவளை கிள்ளி நுள்ளி தகவலை கொடுத்தனர்
தகவல் பெற்ற அவள் மூளை தனக்கு வந்த குருதியையும்
இதயதிற்கு கொடுத்து ஓய்வானது
தலை கோதும் என்விரல்கள்
அவளைக்காணாது படபடக்க தொடங்கின
கண்ணை மூடி காற்றை ஊதி
பொறுமையை ஊட்டினேன்
கண்ணைத்திறந்தேன்- அவள் கண்ணில் என் முகம்
கரம் பற்றினேன்
உதறிக்கொண்டு உதடு கடித்தாள்
துடித்த மீசையை அவள் இமைகள் அதட்டின


சாண் தூரத்தில் வந்தாள்
உம் என்று நான் வந்தேன்
கண்ணைச் சிறுத்து நாக்குக் காட்டினாள்

சிரிப்பு வரவில்லை- கடுப்பே வந்தது
தெரு கடந்ததும் தோளில் தலை சாய்த்தாள்
கோவம் புஸ்வாணம் ஆனது
தலையால் முட்டினான் இந்த நாம்பன்
அந்த நாகுவை
சிரித்தன இரண்டு இதயங்கள்

இதயங்களின் இன்பத்தை இயற்கையும் பொறுக்காது போலும்
மூக்கைச் சீறத்தொடங்கினான் வருணன்
அவள் தலையை என்கரத்தால் மூட
துளிகள் பருக்கத் தொடங்கின
அழகிய காதலர்களை படம் பிடித்தான்
வானில் ஒருத்தன்
அந்தப் படத்தைப்பார்க்க அவர்கள் போட்ட
ரகளை இடியெனக் கேட்டது

பயந்த என்னவள் என் மார்பில் தலை புதைத்தாள்
அவள் பயந்தவுடன் சிங்கமாய் எதிர்த்தேன்-சின்னத் துளிகளை
எம்மைக் கடந்த சைக்கிள் நின்று திரும்பியது
சிங்கமாய் நின்ற நான் சின்னாபின்னமானேன்
அப்பா மூக்குக்கண்ணாடியை உயர்த்தி மீசை கடிக்க
என்கரம் பற்றிய அவள் விரலை
மெதுவாய் கழற்றினேன்
கோவமாய் தொளைக்கடித்தாள்
தலையை ஆட்டியவாறே வண்டியை உளக்கினார் அப்பா

தலையைக் கொட்டியவாறே – உன் மாமாடி என்றேன்
இல்லையே என்றாள் குழந்தையாய்
அடியே என் அப்பாடி என்றேன்
ஐயோ என்று விரல் கடித்து துள்ளினாள்
அப்பா ரொம்ப நல்லவர்டி என்றேன் – கண் கலங்கியபடி.


Tuesday, June 8, 2010

R.K. நாராயணன்.......(வாழ்கை வரலாறு)



பிறந்து          : ஐப்பசி 10, 1906 சென்னை (madras)
தொழில்        : கதாசிரியர் ,நாவல் எழுத்தாளர்
வரையறை  :புனைக்கதை









 ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் நாராயணசுவாமி அவர்கள் தலைசிறந்த ஆங்கில மொழிப் புனைக்கதை எழுத்தாளர்.இவரது கதைகள் மல்குடி என்ற கற்பனை நகரத்தை மையமாகக் கொண்டது.ஆனால் அவரது கதையை வாசித்தவர்களோ அல்லது அவரது கதையை திரைக்கதையாகப் பார்த்தவர்களோ அந்த மல்குடி நகரை நிஜமேனவே உணர்வார்கள்.அந்த அளவிற்கு மனதைஒன்றிச்செய்துவிடும்.(எனது வலைப்பூ ப் பெயரை malgudi என்று வைக்கவும் இதுவே காரணம்.)


இவரை William Faulkner அவர்களுடம் ஒப்பிடுவதற்க்கான காரணம் இருவரும் மனித நேயம் மற்றும் உருக்கமுள்ள மனித உணர்வுகளை வைத்து கதை புனைந்தமையே ஆகும்.




சிறுபிராயம்

இவரது தந்தை ஒரு பாடசாலை தலைமை  ஆசிரியர்.அதனால் அவர் கடமை நிமித்தம் அடிக்கடி இடம் மாறவேண்டி இருந்தது.ஆகையால் இவர் தனது சிறுபராயத்தை தனது பாட்டியுடம் கழித்தார்.அப்பொழுது அவரது நண்பர்கள் மயிலும் குரங்கும் ஆகும்.தமிழில் கற்றுக்கொண்டிருந்த இவரை திடீர் என்று ஆங்கில மொழிப்பாடசாலைக்கு மாற்றிய போது அது அவருக்கு மிகவும் குழப்பம் ஏற்ப்படுத்துவதாக இருந்தது.எனினும் அவரது ஈடுபாட்டுடனான வாசிப்பு முறையும் அந்தச் சூழலும் இலகுவில் அவரை ஆங்கிலத்தில் தேர்ச்சி அடையச்செய்தது. 


இவரது தந்தை மைசூர் Maharajah's Collegiate High School இக்கு இடம் மாறிய போதும் இவரும்  அங்கு மாற்றலானார்.ஆரம்பத்தில் பல்கலைகழக நுழைவில் சித்திபேறத் தவறிய இவர் மீண்டும் முயன்று தெரிவானார்.பட்டப்பிடிப்பின் பின் ஆசிரியராக பொறுப்பேற்ற இவருக்கு அது போதியளவு திருப்தி அளிக்காததால் ,வேலையில் இருந்து விடைபெற்று முழு நேரமாக நாவல் எழுத்ததொடங்கினார்.




திருப்பு முனை

1933 ல் ராஜம் என்ற 15 வயதுப் பெண்ணின் மீது காதல் வயப்பட்ட நாராயணன் சாத்திர சம்பிரதாயத்தை மீறி அவரைக் கரம்பற்றினார்.அதன் பின் The Justice பத்திரிகையின் நிருபராக பணி ஏற்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார்.பின் Oxfordல் உள்ள நண்பனுக்கு Swami and Friends to Graham Greene("சுவாமியும் அவனது நண்பர்களும்") என்ற ஆங்கில நாவலின் கையெழுத்துப் பிரதியை அனுப்பினார்.அந்த நாவலானது 1935 ல் வெளியிடப்பட்டது.



அதன் பின் நாராயணன் ஆங்கில வாசகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் ஆனார்.தொடர்ந்து தனது கல்லூரி அனுபவத்தை மையமாகக்கொண்டு The Bachelor of Arts (published in 1937)என்ற நாவலை எழுதினார்.
மூன்றாவது நாவலாக The Dark Room (published in 1938)ஐ எழுதினார்.இது கணவன் மனைவியின் உயிர் ஊடமுள்ள உணர்வை கதைக்களமாகக் கொண்டிருந்தது.




சோதனை

1937 ல் தந்தை மரணத்தால் மனம் சோர்ந்திருந்த இவருக்கு 1939 ல் தைபோய்ட்(typhoid)ஆல் மனைவி இறந்தது பேரிடியாக இருந்தது.மூன்று வயது மகள் கேமலதாவுடன் தனித்து நின்றார்.
அந்த நிர்கதியான சூழ்நிலையில் பொருளாதாரத்தைக்கருதி The English Teacher என்ற நாவலைஎழுதினார்.

பின் 1940 ல் ஊடகத்துறை நோக்கி நகர்ந்தார்.கார்த்திகை 1942 ல் Malgudi Days சிறுகதைத்தொகுப்பு வெளிவிடப்பட்டது.இங்கிலாந்து உடனான உறவு முறிவுற்ற நிலையில் சொந்தமாக Indian Thought Publications என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார்.இன்றும் அவரது பேத்தியால் நிர்வகிக்கப்படுகிறது.




இறுதிக்காலம்


மைசூரில்  தனியாக வாழ்ந்த அவர் தோட்டம் செய்வதில் ஆர்வம காட்டினார்.நோய்வாய்ப்பட்டதால்1990 சென்னை வந்த அவர் , May 13, 2001 ல் தனது 94 வது வயதில் உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.




Awards

1. National Prize of the Sahitya Akademi -1960
2. Padma Bhushan -service to literature in 1964 
3. the AC Benson Medal by the Royal Society of Literature -1980
4. honorary member of the American Academy and Institute of Arts and Letters -1982
5. the University of Mysore, Delhi University and the University of Leeds ஆகியபல்கலைக்கழகங்கள்டாக்டர் பட்டம் வழங்கின.
6. Padma Vibhushan -2000. 

நூல்கள்

Bibliography

Novels

* Swami and Friends (1935, Hamilton)
* The Bachelor of Arts (1937, Nelson)
* The Dark Room (1938, Eyre)
* The English Teacher (1945, Eyre)
* Mr. Sampath (1948, Eyre)
* The Financial Expert (1952, Methuen)
* Waiting for the Mahatma (1955, Methuen)
* The Guide (1958, Methuen)
* The Man-Eater of Malgudi (1962, Heinemann)
* The Vendor of Sweets (1967, Bodley Head)
* The Painter of Signs (1977, Heinemann)
* A Tiger for Malgudi (1983, Heinemann)
* Talkative Man (1986, Heinemann)
* The World of Nagaraj (1990, Heinemann)

Collections

* The World of Malgudi (2000)
* Salt and Sawdust: Stories and Table-Talk
* Malgudi Days (1942))
* Dodu and Other Stories (1943)
* Cyclone and Other Stories (1945)
* An Astrologer's Day and Other Short Stories (1947)
* Lawley Road and Other Stories (1956)
* A Horse and Two Goats (1970)
* Forty-Five a Month
* Under the Banyan Tree and Other Stories (1985)
* The Grandmother's Tale and Selected Stories (1993)
* The Watchman
* Fruition at Forty
* Indian Thought (1941)
* The Missing Mail
* The Martyr's Corner

Non-Fiction

* Next Sunday (1960)
* My Dateless Diary (1964)
* My Days (1974)
* The Emerald Route (1980)
* A Writer's Nightmare (1988)
* Like The Sun

Mythology

* Gods, Demons and Others (1965)
* The Ramayana (1972)
* The Mahabharata (1972)
தொலைக்காட்சித் தொடர்  

R.K. நாராயணனின் கதையை Shankar Nag அவர்கள்  இயக்கிய Malgudi Days தொலைக்காட்சித்தொடர் உலக்க்ப்பிரசிதம்.இந்த தொடர் கர்நாடக அகும்பே என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது.இன்றும் இத்தொடர் பல்வேறு மொழிகளுக்கு மாற்றப்பட்டு உலகம் பூராக ஒளிபரப்பப்படுகிறது. 


 


(பின் குறிப்பு : Shankar Nagன் தமிழ் மொழி மூலத்தொடரை தரவிறக்க முயன்ற போதும்(via torrent) ஹிந்தி மற்றும் ஆங்கில பாதிப்புகளே காணப்படுகின்றன.தமிழ் தொடர் இணையத்தில் இருந்தால் தயவு செய்து அறியத்தரவும்.)
 

Saturday, June 5, 2010

திகைப்பூட்டும் மரங்கள்

 நாளொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் வந்தாலும் இயற்கையும் தன் பங்கிற்கு மிரட்டிக்கொண்டே இருக்கின்றது.


10. தனித்துவம்
      மரம் சாதாரணம் என்றாலும் அது நிலைகொண்டுள்ள  இடமே ஆச்சரியத்திற்கு காரணம்.பசுபிக் சமுத்திர வாயிலான Pebble Beach ல் கற்பாறையில் செழிப்புடன் காணப்படுகிறது.



9.
     இயற்கையின் கைவண்ணம்.

8. பெரிய மரம்
   கலிபோர்னியாவில் மாத்திரமே வளரும் இம்மரமே உலகில் மிகப்பெரிய     மரமாகும்.Sequoia National Park ல் காணப்படும் General Sherman [wiki] என்ற மரமானது 275 feet (83.8 m) உயரத்தையும் , over 52,500 cubic feet of volume (1,486 m?)இக்கு மேற்ப்பட்ட  கனவளவையும், 6000 tons நிறையையும் கொண்டது.இம்மரத்தின் வயது 2200 ஆண்டுகள் என்று நம்பப்படுகிறது.


7. உலகிலே உயரமான மரம்.
 இதுவே உலகில் உள்ள உயரமான மரமாகும்.Hyperion என்று அழைக்கப்படும் இம்மரமானது  Redwood National Park ல் உள்ளது.இதன் உயரமானது 379 feet (115 m).


6. விசித்திரமான தேவாலயங்கள் 



5.Quaking Aspen  (நடுங்குகின்ற மரம்)

இம்மரமானது நிலத்திற்கு கீழாக வேர் வலைப்பின்னலைக் கொண்டுள்ளன.இவற்றின் மூலம் ஒன்றே.47,000 தண்டுகளைக்கொண்டுள்ள இத்தோப்பு 107 ஏக்கருக்கு பரந்து காணப்படுகிறது.ஒவ்வொரு தண்டினதும் சராசரி ஆயுள் காலம்  130 ஆண்டுக்களாகும்.இந்த வேரின் மூலம் 80,000ஆண்டுகளாக உயிர் வாழ்வதாக நம்பப்படுகிறது.


4. மிகப்பெரிய மிருக முகம் கொண்ட அடி
   மிகப்பெரிய அடியைக்கொண்ட மரம்.இது Oaxaca, Mexicoல்உள்ளது.

3.   ஆலமரம் (Banyan Tree)


இதன் வேர்கள் கிளையில் இருந்துதொங்கிக்கொண்டிருக்கும்.

2. உலகில் வயதான மரம்


கடல் மட்டத்தில் இருந்து 11,000 feet உயரத்தில் உள்ள Methuselah மரமானது 4,838 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது.இது அதிக வயதுள்ள மரம் மட்டும் அல்ல,உயிர் இனமும் கூட.

1. Baobab (தண்ணீர் தாங்கி)





100 feet (30 m) உயரமும்  35 feet (11 m) விட்டமும் கொண்ட இம்மரத்தின் சிறப்பியல்பு என்னவென்றால்  31,700 gallon (120,000 l) இக்கும் அதிகமான தண்ணீரை தன்னுள் சேமித்து வைக்கிறது.



 -----மரங்களைப் பாதுகாத்து இயற்கைச் சமநிலையைப் பேணுவோம்.-----