Saturday, March 19, 2011

விஜயின் சூப்பர் ஜோடி


எவ்வளவுதான் உருகி உருகி கவிதை எழுதினாலும்(அப்படி என்றால் நீ எழுதினது கவிதையா?,ஸ்ஸ்ஸ்....அப்படி எல்லாம் கேட்கப்படாது.),மண்டையை நோண்டி கதை எழுதினாலும்(கதை தேறிட்டோ ,இல்லையோ ;நிறைய முடி உதிர்ந்திச்சு!) ஒரு குறுகிய வட்டம் வந்து பார்த்துவிட்டுச் செல்லும்.ஆனா சினிமா ஸ்டார்கள் பற்றி ஏதாவது கிசு கிசுத்தால் போதும் பார்வையாளர்கள் எண்ணிக்கை எகிறிக்குதிக்கும்.அதனால இடைக்கிடையே நானும் அவர்களின் பெயர்களை என் ப்ளாக்கின் பிரபலத்திற்காக உபயோகின்றேன்.
என்ன பப்ளிக்ல உண்மைய ஒத்துக்கிட்டான்,என்று பார்க்கின்றீர்களா?எல்லாம் ஒரு காரணமாகத்தான்.என் நண்பன் ஒருவன் ஒரு மிகுந்த எதிர்பார்ப்போடு ஒரு கதையை எழுதிப் பதிவிட்டான்.பின் அதை அனைத்து திரட்டியிலும் இணைத்தான்.
அப்புறம்,மொத்தம் 20 பேர் பார்த்தாங்கையா!(நண்பா,ஊரைக்கூட்டி நாறடிக்கான் நாதாரி என்று நினைக்காத.உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கட்டும் என்று தான் இதெல்லாம்.எப்பூடி..............;-))

பதிவில் எப்படி வாசகர்களை சுண்டி இழுப்பது என்பதை அவனுக்கு ப்ராக்டிகலாக புரியவைக்கதான் இந்தப் பதிவு.என் ரசிக மகா ஜனங்களே (அப்படி யாராவது இருக்கிறீங்களா?)என் தலையில் துண்டைப் போடவைத்துவிடாதீர்கள்.

அப்ப தலைப்பு,ஆமாகொஞ்சம் கீழ பாரு கண்ணா......
ஹா ஹா ஹா.....................
என்னாலே தாங்க முடியல்ல ,விஜய் ரசிகர்கள் எப்படித்தான் தாங்கப் போகிறார்கள் தெரியவில்லையே..............................
.
..
...
....
இப்ப உலகக்கோப்பை கிரிக்கெட்,ரொம்ப சூடா போய்ட்டு இருக்கில்ல.அப்ப இதையும் பார்த்திடுங்க மக்கா
சூப்பரா இருக்குதில்ல?

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.:-)

Wednesday, March 16, 2011

அத்தி பூத்தாப்போல





அலைச்சலுடன் புகைவண்டி ஜன்னல் இருக்கையில்-நான்

என்னை மோதிச் சென்ற காற்று – கவிதை சொன்னது

கடந்து சென்ற கட்டடங்கள்-காலத்தை மீட்டன

குருதியை உறிஞ்சிய கொசுக்கள்-என்னில் பசி போக்கின

இதயம் வராத காதலிக்காய் வசை பாடியது.


தேடிக்களைத்த இதயம் தனிமையாய் துடித்தது

தொலைந்த பார்வை-ஒண்டியாய் நிலாவைக் கண்டது

காதலர்கள் ரசிக்கும் நிலாவுக்கு காதலி இல்லை

அது ஏதோ எனக்கு ஆறுதல் சொன்னது.

மீசை அரும்பும் போது இருந்த தேடல் இன்றில்லை

காலத்தின் கோலத்தின் காதல் எண்ணமும் கலைந்து விட்டது

கண்ணீர் முட்டுகையில் தோள் சாயத்துடித்த தலையும்

உன் கண்ணில் முகம் பார்க்கத் துணிந்த கண்ணும்

செல்லத்தில் நுள்ளத்துடித்த விரல்களும்

பலத்தைத் காட்ட முனைந்த புஜமும்

உன் நெற்றியை முத்தமிட எண்ணம் கொண்ட உதடும்

உன் கரம் மூட நினைத்த என் கரமும்

கிடையாத காதலிக்காய்-கிடையாய் கிடக்கின்றன


தொம் என்று அமர்ந்த அதிர்வில் நான் குலுங்க

என் மீது விழுந்த துப்பட்டாவை நோகாமல் தூக்கின அவள் விரல்கள்

கண்கள் நம்ப மறுத்தன-அவை விரல்கள் என்று

பொன்னிற விரல்களிலே-பூக்களாய் பூத்திருந்தன சோளம் முடிகள்

கரம் பார்த்த கண்கள்-முகம் பார்க்கத் துடித்தது

தடுக்க நினைத்த மனதை தாண்டிக் குதித்து என் பார்வை.

நான் அவள் பக்கம் திரும்ப-அவள் மறுபக்கம் திரும்ப

சூரிய வதனம் தேடிய எனக்கு அஸ்தமனப் பேறே கிட்டியது

குமுறவில்லை மனசு-செழித்த சோலையாய்க் கூந்தலைப் பார்த்தால்

கணங்கள் ரணமாய்க் கடக்க........


என் ஒவ்வாத(-)முனைகள் ஈர்த்தன

அவள் ஒத்த(+)முனைக்காந்தக்கண்களை


தேவதை ...அவள் ஒரு தேவதை...

துடிக்க மறந்தது என் இதயம்

அவள் நாசியில் இருந்து மீண்ட அவள் சுவாசம்

என் இதய அறையை நிரப்ப

புதிதாய்த்துடித்தது “லவ் டப் என்று.

Thursday, March 3, 2011

நடிகர் விஜயின் facebook profile

விஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.இல்ல இல்ல புளிப்பான செய்தி.
இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டாலோ,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு கம்பனி பொறுப்பல்ல.காரணம்,பார்த்தேன்....ரசித்தேன்....பகிர்ந்தேன்.


படம் தெளிவின்மையாக இருந்தால் படத்தைக் கிளிக் பண்ணிப்பார்க்கவும்.