Saturday, January 28, 2012

இங்கே தமிழனை விட மலையாளி பல படி மேல்


சில புகைப்படங்களைப் பார்க்கும் போது எம்மையறியாமல் மனதிற்குள் சந்தோசம் பொங்கும்.அதே போல் சில படங்களைப் பார்க்கும் போது வெறுப்பும் கோவமும் ஒருங்கே ஏற்படும்.இந்தப் படத்தைப் பார்த்த மானமுள்ள தமிழனுக்கு மேலே சொன்னதில் எந்த உணர்வு ஏற்ப்படிருக்கும் என்று நான் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை.

Wednesday, January 4, 2012

என்ன கொடும்...ம சரவணன்..............

வேலைப்பளு கூடிவிட்டதாலும் ,பரீட்சை நெருங்கிக் கொண்டிருப்பதாலும் என் வலைப்பூவின் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.ஆனாலும் வேலையில் ஆணி பிடுங்கும் போதும் ,பஸ்ஸில் குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கும் போது முடிந்த மட்டும் வலையுலகில் மேய்ந்து கொண்டிருப்பேன்.(தேசிய கடமையைச் செய்யாம..எப்படி பாஸ்......).

அப்பொழுது கண்ணில் பட்ட தலையங்கம் சுர்ர்ர்ர் என்றிருந்தது.
நான் கடந்த ஆண்டு பெப்ரவரி 9ம் திகதி எழுதிய அதே ஆக்கம்,எவ்வித மாற்றமும் இன்றி வேறு வலைத்தளத்தில் வெளியிடப் பட்டிருந்தது.