Sunday, June 2, 2013

நானும் இசைஞானி இளையராஜாவின் இசையும்...பாகம் 1


இளையராஜா அவர்களின் எழுவதாவது பிறந்த நாளுக்கு என் வாழ்த்துக்கள்.அவரது இசை என்னை கரம் பிடித்து அழைத்துச் செல்வதாய் ஒரு உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.நான் கடந்து வந்த அவரின் இசையை தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.

நான் எப்பொழுது முதலில் சினிமாப்பாடல்களைக் கேட்க்கத்தொடங்கினேன் என்று மிகவும் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் நான் முதலில் ரசித்த பாடல் கண்டிப்பாக இளையராஜா பாடலாகத்தான் இருக்கும் என்று சர்வ நிச்சயமாக நம்புகின்றேன்.காரணம்  80 களின் இறுதியில் இளையராஜா பாடல் இல்லாமல் ஒரு தமிழ் வீட்டிலும் பொழுதுபுலரையும் மாட்டாது,அந்தி சாயையும் மாட்டாது.அந்தளவுக்கு தமிழனின் ஒவ்வொரு அசைவிலும் இளையராஜாவின் இசை இருந்தகாலகட்டம் அது.

Tuesday, May 21, 2013

சுய சொறிதல்


நீண்டநாட்களிற்குப் பின் வலைப்பூ எழுதுகின்றேன்.அடிக்கடி யோசிப்பேன்,வலைப்பூவை அப்டேட் பண்ணணும் என்று,ஆனால் சோம்பல் விடவில்லை.ஆனால் இன்று ஒரே மூச்சில் எழுதுவதற்குக் காரணம்,அழுத்தமான மனநிலையில் இருந்து விடுதலை பெறவே.நான் வலைப்பூ எழுத ஆரம்பித்ததே,என் மனதின் ரிலாக்ஸ்க்கே.

Saturday, January 5, 2013

வலியையும் வேதனையையும் உணராவிட்டாலும் பரவாயில்லை,அதை வைத்து ஆதாயம் தேடாதே


சனிக்கிழமை என்பதால் அரை  நாள் வேலையை முடித்துக்கொண்டு ,ஏதோ விடுதலை உணர்வை சற்றே உணர்ந்தவனாய் அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான் அவன்.
பிரதான பாதையை அண்மித்தவனுக்கு சற்றுத்தொலைவில் சுட்டெரிக்கும் வெயிலில் அழுக்காய் ஒரு பெண் தென்பட்டாள்.அவளை நோக்கி நடந்துகொண்டிருந்தவனுக்கு அவளது அழுகையுடன் கூடிய முனகல் தெளிவாய்க்கேட்டது.அந்த ஓசை மனசை சற்றே உலுக்க அவளை நோக்கி பார்வையைக் கூர்மைப்படுத்தினான்.