Sunday, June 2, 2013

நானும் இசைஞானி இளையராஜாவின் இசையும்...பாகம் 1


இளையராஜா அவர்களின் எழுவதாவது பிறந்த நாளுக்கு என் வாழ்த்துக்கள்.அவரது இசை என்னை கரம் பிடித்து அழைத்துச் செல்வதாய் ஒரு உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.நான் கடந்து வந்த அவரின் இசையை தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.

நான் எப்பொழுது முதலில் சினிமாப்பாடல்களைக் கேட்க்கத்தொடங்கினேன் என்று மிகவும் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் நான் முதலில் ரசித்த பாடல் கண்டிப்பாக இளையராஜா பாடலாகத்தான் இருக்கும் என்று சர்வ நிச்சயமாக நம்புகின்றேன்.காரணம்  80 களின் இறுதியில் இளையராஜா பாடல் இல்லாமல் ஒரு தமிழ் வீட்டிலும் பொழுதுபுலரையும் மாட்டாது,அந்தி சாயையும் மாட்டாது.அந்தளவுக்கு தமிழனின் ஒவ்வொரு அசைவிலும் இளையராஜாவின் இசை இருந்தகாலகட்டம் அது.