Monday, August 27, 2012

மீண்டும் முகமூடி....




ஹாய் அன்பான வாசகர்களே .....
இப்படி ஆரம்பிப்பதற்க்குதான் ஆசை,ஆனால் ஆசை மட்டும் இருந்தால் பத்தாதே வாசிப்பதற்கு வாசகர்களும் வேண்டுமே???எது எப்படியோ,எனக்கும் இந்த சமூகத்துக்கும் (வாசிக்கும் நாலு பேர்)ஒரு தொடுப்பாக இந்த வலைப்பூ இருந்துட்டுப்போகட்டுமே....
முந்தி எல்லாம் தனிமை கிடைக்கும் போது அடுத்து என்ன எழுதலாமென்று யோசித்து மனதிலே லிஸ்ட் போட்டு வைத்திருப்பேன்.என் வலைப்பூவே ஹோம் பேஜ் ஆக இருந்தது எல்லாம் ஒரு காலம்.இப்போ வலைப்பூவின் பெயரை யோசிச்சு டைப்பண்ற அளவிற்குப்போயிற்று...
so sad….


இப்போது எனது ஒவ்வொரு மூவ்விற்கும் கடவுள் செக் வைப்பதால்,பிடிப்பு என்பது உணவில் கூட இல்லாமல் போய்விட்டது.என்னை நான் சந்தோசமாக வைத்திருக்க நான் செய்யும் முயற்சியில்,இந்தப் பதிவு எழுதுதல் ஒரு வழியாக இருக்கும் என்றநோக்கில் மீண்டும் தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.(கண் ஆபரேசனுக்குப்பிறகு எழுதுவாற சுஜாதா என்ற நினைப்பு,படுவா(
me))

12B ஷாம்க்கு இன்டர்வியூ மிஸ் பண்ணபடியால்தான் ஜோதிக்காவும் கிடைச்சது,ஜாலி வாழ்கையும் கிடைச்சது.ஆனா பலருக்கு இன்டர்வியூ மிஸ் பண்ணா இருக்கின்ற நிம்மதி போறதோட ,பிடிக்கிற தருவாயில இருகின்ற கிளியும் பறந்து பறந்து போய்டுமாம்.... (ஒரு உதாரணத்துக்குச் சொன்னன்,நோ சம்பந்தம் டு மீ)

சரி,மேட்டருக்கு வாறன்,,கொஞ்ச நாளா மூடி இருந்த கடைய,தூசு தட்டிட்டு இருக்கேங்க ,அம்புட்டுதான்



Monday, April 23, 2012

என் நாய்க்குச் சமர்ப்பணம்



கடந்த மாதம் ஆரம்பித்த தொடர்கதையானது பாதியிலேநிற்கின்றது. தொழில்க் கடமைக்கு மத்தியில் பரீட்சைக்கு தயாராகவேண்டிய சூழ்நிலை.எழுதுவதற்கான ஆசை அதிகமாய் இருந்தாலும் அதைவிட அவசியமான கடமைகள் இருப்பதனால்,வலைப்பதிவில் இருந்து சற்று விலகியிருக்க தீர்மானித்திருந்தேன்.அதையும் தாண்டி பதிவு எழுதத்தூண்டியது,இன்று நடந்த சம்பவம்.


Sunday, March 25, 2012

கண்ணுக்குத்தெரியாத என் தேவதை....பாகம் 3

இந்தத் தொடர்கதையின் முன்னைய பாகங்களைப் படித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

(அப்படி என்ன கறுமத்தை எழுதித்துலைத்திருப்பான்,மன்னிப்பு என்று பெரிய வார்த்தை எல்லாம் கேட்கின்றான் என்று யோசிக்காதிங்க,உலகத்துக்கே உயிரூடுகின்ற காதலை மையமாக வைத்து ஒரு தொடர்கதையை ஆரம்பித்தேன்.அது ஆரம்பித்த நேரமோ தெரியவில்லை,ஆபீஸில் ஏகப்பட்ட வேலை.இன்று நீண்ட இடைவேளைக்குப் பின் ஆரம்பித்தால் ,எனக்கு முந்தி ஞாபகத்தில் வைத்திருந்த கதை மறந்துவிட்டது.கற்பனைக்கா பஞ்சம்,வேறு கோணத்தில் ஆரம்பித்து விட்டேன்.)

படிக்க ஆரம்பிப்பவர்கள் மீண்டும் முதல் பாகத்தில் இருந்து படிக்கவும்....
(பொறுமையாகப் படியுங்கள்,உங்கள் முதல் காதல் காட்சி சற்று லேசாகவே நிழலாடும்....அப்படி ஞாபகம் வராவிட்டால் நான் பொறுப்பில்லைங்கோ)

பாகம் 1

பாகம் 2



“பார்த்தாயா??சார் போன் பண்ணியிருக்கார்,நல்ல காலம் ருவந்திக்கா போனத் தூக்கிட்டால்,இல்லாட்டி அந்தக் கொடுப்புலிர கோவத்துக்கு ஆளாகி இருக்கணும்....,என்று சத்துரி முடிப்பதுக்குள் “நீ பெரிய அழகி என்று நினைப்போ!எல்லாருக்கும் பட்டப்பெயர் வைச்சுக் கலாச்சிட்டு இருக்கா,என்று போலியாய் முறைக்க “ப்ளீஸ்டா,உண்ட காதல் கருமாந்திரத்த சீக்கிரம் சொல்லித் தொலைடா,சார் மீண்டும் கால் பண்ணுவதற்குள் நான் போகணும்என்று கைகூப்பினாள்.