Friday, December 17, 2010

மோட்டார் சைக்கிள் கபாலிகள்




மோட்டார் சைக்கிள வச்சிட்டு நம்ம பசங்க பன்ற ரவுசு தாங்கல எண்டு நினைச்சிட்டு இருந்த எனக்கு இந்தப்புண்ணியவான்களைப் பார்த்ததற்க்குப் பிறகு, அட நம்ம பயல்கள் தேவல என்று தோணிச்சு.பாருங்கையையா பாருங்க !
இந்த கொக்கா மக்கா பாக்கிற வில்லங்கத்தை.

இவங்களுக்கு நம்ம ஸ்டைல சில கமெண்ட்ஸ் விட்டுப் பார்க்கலாம் எண்டுதான்.



என்ன தான் மண்டைக்கு ஹெல்மெட் போட்டாலும் பாடி டமேஜ் ஆயிட்டா பெர்சனாலிட்டி கம்மி ஆயிடும் இல்ல.அதுமட்டும் இல்ல மக்கா,புது ஸ்டைல் எண்டா பொண்ணுகளுக்கு ரொம்ப இஷ்டம்.
வட்டா...........................








சட்டை போடாம போகிறாரே அவர் பெயர் தான் சல்மான்கான்,பின்னாடி அவர் தொப்பை ஆடாம பிடிச்சிட்டு இருக்காங்களே அவ நம்ம அசினுதாங்க.அதான் இருவரும் சேர்ந்தா நமக்குப் பிடிக்காதே எண்டுதான் ஹெல்மெட்டைப் போட்டு முகத்த மறச்சிருக்காங்க.இரண்டு பேருக்கும் இடையில ஒரு பய புள்ள தெரிறானா?அதாங்க குறிசுக்காட்டிப்புட்டம்.யாரு பெத்த புள்ளையோ இம்புட்டுக் கஷ்டப்படுகிறான்.அவன் என்ன சொல்லியிருப்பான்

அட முள்ளமாரி உண்ட கப்புத்தாங்காம மூச்சே அடங்கிட்டையா ! என்ன உங்கட ஆட்டத்தில சேர்த்துக்காதீங்க,நான் எப்படியோ பிழைச்சிக்கிரன்.
வண்டியைக் கொஞ்சம் நிப்பாட்டுடா.புச்சி மண்டையா!










ஜாஸ்தி பேச விரும்பல்ல,இனம் இனத்தைச் சேரும் என்பதற்கு நல்ல சாம்பிள்.










பன்னிக்குட்டி போல பசங்களைப் பெத்துப்போட்டது தப்பில்லையா,
ஆனா அத்தனையையும் மாட்டு வண்டியில கொண்டு போற நினைப்பில ,மோட்டார் சைக்கிள்ல கொண்டுபோறியே பாரு !
அது தான் தப்பு.
மண்டைக்கு மேல கூடாரம் ஒரு கேடு.
ஊரு விளங்கிடும்....................









அடேய் சண்டாளா பாருடா,
பன்னிக்குட்டிகள் மூச்சிவிட முடியாம எப்படி மூஞ்ச நீட்டிட்டு இருக்குதுகள் எண்டு.
அடைச்சதும் அடைச்சா,ஒரு பெரிய கூட்டில அடைச்சா குறைஞ்சா போயிடுவா.

சார்,இவனை மிருக வதைச் சட்டத்தில பிடிச்சு ஒரு சின்ன செல்லில அடையுங்க.





நம்ம மூஞ்ச தொடந்து க்ளோஸப்பில பார்த்து நமக்கே இம்புட்டு கடுப்பாயிட்டே.
பாவம் ஜனங்க ,எத்தனை சிரமப்பட்டு இருப்பாங்க.










மாப்பு ! ஜஸ்ட்டு சறுகின,ஊருக்கே ஆம்லெட் போட்ட கதையாகிடும்.
அம்புட்டுதான் ,சொல்லிப்புட்டேன்.


























நக்கலு...............

Friday, December 10, 2010

கணனியில் தகவல் பாதுகாப்பு-பாகம் 1


கணணிப்பாவனையின் உயிர்நாடியான விடயமே தகவல் பாதுகாப்பு என்பதனை ஜூலியன் அசேஞ்சும் விகிலீக்சும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.ஜூலியன் அசேஞ் பற்றி விபரமாக அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தால் சுடுதண்ணி அவர்களின் வலைப்பூவைப் பார்க்கவும்.தொடர்ப்பாகங்களாக மிகவும் ரசனையாக எழுதியுள்ளார்.


சாதாரணமாக அலுவலகப் பாவனையில் தகவல்ப்பாதுகாபு சம்மந்தமாகத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.அதற்கு என் சோம்பல் எதிர்ப்புத் தெரிவியாமல் இருப்பது வாசகர்களின் கைகளிலே உள்ளது.
;-)

1.

இணைய உலாவிகளிலே(Internet Browsers) பாதுகாப்புக் கூடியது எனக்கருதப்படுவது Firefox ஆகும்.அதில் உள்ள ஒரு குறைபாடானது நாம் அதில் சேமிக்கும் கடவுச்சொற்களை இலகுவில் திருடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
பொதுவாக Tools -> Options -> Security Tab -> Saved Passwords ஐக் கிளிக் பண்ணினால் நான் எந்தெந்த சைட்(web site) களுக்கு என்னென்ன பயனர் பெயர் (user name)உபயோகிக்கின்றோம் என்பதைக் காட்டிவிடும்.பின் show passwords ஐக் கிளிக்கினால் அதன் கடவுச்சொல்லையும் காட்டிவிடும்.
இந்த தரவுகள் சேமிக்கப்பட்டுள்ள இடத்தை அறிய start -> run -> %appdata% என type ப் பண்ணி எண்டரைத் தட்டவும்.அது எம்மை C:\Documents and Settings\Your user name\Application Data
இக்கு அழைத்துச் செல்லும். தொடர்ந்து Mozilla -> Firefox ->Profiles ->c149sv6i.default சென்றால் key3.db எனும் database file ஐக் காணலாம்.இந்த file இலே user name & passwords விபரங்கள் சேமிக்கப் பட்டுள்ளன.இதை யாராவது copy பண்ணி தங்களது கணனியில் அதே location இல் paste பண்ணிவிட்டால் போதும் அத்தனை தகவல்களும் கைமாறிவிடும்.
இதனைத் தடுக்க ஒரு இலகுவான வழி உள்ளது. Tools -> Options -> Security Tab ->Master passwords என்பதைக் கிளிக்கி password ஐ உருவாக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் அந்த key3.db ஆனது encrypt செய்யப்பட்டுவிடும்,அதனை decrypt செய்வதற்கு Master password தேவை.
Master password உருவாக்கி விட்டால் எமது passwords களை யாரும் அறிய முடியாது என்று இல்லை.perl ,java script மூலம் அதனையும் தகர்த்து விடலாம்.திருடன் திறமைசாலியாக இருந்தால் தகவல் திருட்டைத் தவிர்க்கவே முடியாது.ஆனாலும் முயன்றவரைத் தடுப்பது எமது கடமை.