நான் எழுத
நினைத்த கவிதை - நீ
நான் வரையத் துடிக்கும்
ஓவியம் – நீ
என் காதில்
இசைக்கும் ராஜா இசை – நீ
என் கண்ணுக்குள்
தூங்கும் கனவு -நீ
என் வாழ்வை
அழகாக்கும் வானவில்லடி -நீ
உன் மெலிய கன்னம்
என் தோள் சாய்கையில்
உன் கூந்தல் முடி
என் முகம் படர்கையில்
உன் கரம் என்
சட்டை கசக்குகையில்
உன் தோடு என் தோள் கீறுகையில்
உன் மீது நான் கொண்ட மோகம்- என் வாழ்வில் நான் கண்ட
புது சுகம்
தொண்டை மீற
அஞ்சிய வார்த்தை
நெஞ்சோடு நீ சொன்ன ரகசியம்
சிரித்தாயா என்று கேட்க்கச் சிணுங்கிய உன் சத்தம்
தவிப்போடு நீ
பார்த்த பார்வை
ஜென்மத்துக்கும்
மறக்காதடி – என்னவளே
நெஞ்சோடு நீ சொன்ன ரகசியம்
சிரித்தாயா என்று கேட்க்கச் சிணுங்கிய உன் சத்தம்