Saturday, August 16, 2014

உனக்காக மட்டும் ...(பாகம்-2)

நான் எழுத நினைத்த கவிதை - நீ
நான் வரையத் துடிக்கும் ஓவியம் – நீ
என் காதில் இசைக்கும் ராஜா இசை – நீ
என் கண்ணுக்குள் தூங்கும் கனவு -நீ 

என் வாழ்வை அழகாக்கும் வானவில்லடி -நீ



உன் மெலிய கன்னம் என் தோள் சாய்கையில்
உன் கூந்தல் முடி என் முகம் படர்கையில்
உன் கரம் என் சட்டை கசக்குகையில்
உன் தோடு என் தோள் கீறுகையில்

உன் மீது நான் கொண்ட மோகம்- என் வாழ்வில் நான் கண்ட புது சுகம்


தொண்டை மீற அஞ்சிய வார்த்தை
நெஞ்சோடு நீ சொன்ன ரகசியம்
சிரித்தாயா என்று கேட்க்கச் சிணுங்கிய உன் சத்தம்
தவிப்போடு நீ பார்த்த பார்வை

ஜென்மத்துக்கும் மறக்காதடி – என்னவளே


 

0 comments:

Post a Comment