Sunday, August 10, 2014

உனக்காக மட்டும்...



காற்றில் மிதக்கும் இறகாய்,உன் மடி தேடி நான் அலைகின்றேனடி
கசக்கி எறிந்த காகிதமாய் உன் கரம் பற்றுதலுக்காய் தவிக்கிறேனடி
கண்மூடித் தெரியும் உன் முகம்,கண் முன்னே தெரிய வேண்டுகிறேனடி
காற்றும் நம்மைப் பிரிக்கக்கூடாதென்று,கட்டித் தழுவ காத்திருக்கிறேனடி

என் மனசின் பேச்சு உன் செவிக்குக் கேட்கணுமடி
என் இதயத் துடிப்பு உன் இதயத்துடன் பரிவாகணுமடி
உன் மூச்சுக்காற்றை நான் சுவாசிக்க
உறங்கிய என் உணர்வு உயிர்பெற வேணுமடி


பின் சீட்டில் இருந்து பள்ளத்தில் இறங்கியதில் முட்டிய உன் மார்பு
பின் கழுத்தைக் கூச்ச மூட்டிய உன் உஷ்ண மூச்சுக்காற்று
தோள் பற்ற அஞ்சி,என் தோளில் பியானோ வாசித்த உன் விரல்கள்
நினைவுப் பொக்கிஷத்தில் நீங்கா இடம் பெற்று விட்டனதடி

உன்னை என்னிடம் பிரிக்கும் நாட்களும்
என்னில் உன்னைத் தேடும் என் காதலும்
உன் மடிமீது சயனிக்க ஏங்கும் என் மனசும்
என்னை நீ அடையும் தருணதுக்காய்,காத்திருக்கின்றன-என்னவளே


(நீண்ட நாட்களின் பின் எழுதுகின்ற படியால்,வார்த்தைகள் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய்...வர முடியாமல்,வரத் தவிகின்ற்றது.)

0 comments:

Post a Comment