Saturday, May 24, 2014

இப்பெல்லாம் சூர்பனைகள் பஸ்ல பிரயாணம் பண்ண ஆரம்பிசிட்டாளுகள்...



போனவாரம் கொழும்பில இருந்து மட்டக்களப்பு வரும் போது,சூர்பனகை,அவ சிஸ்டர்,அவ பிரண்டு மூணு பேரு பின் சீட்ல.டிரைவர் பஸ்ஸ மூவ் பண்ணாம,பொறுமையைச் சோதிச்சிட்டிருந்தார்.வியர்வை ஆளை நனைத்துக்கொண்டிருந்தது.பின்னால் இருந்த புண்ணியவதிகள்,தங்கள் ஜன்னலை முழுமையாகத் திறந்து முன்னாள் இருந்த என் ஜன்னலை முழுமையாகப் பூட்டி இருந்தனர்.

பிள்ளைகள் தவறுதலாய்ச் செய்துவிட்டனர் என்று நினைத்து என் ஜன்னலைக் கால் வாசி திறந்த அடுத்த நொடி,என் இதயம் திடுக்கிட அகோரமாய் அடித்து மூடப்பட்டது.