Saturday, January 5, 2013

வலியையும் வேதனையையும் உணராவிட்டாலும் பரவாயில்லை,அதை வைத்து ஆதாயம் தேடாதே


சனிக்கிழமை என்பதால் அரை  நாள் வேலையை முடித்துக்கொண்டு ,ஏதோ விடுதலை உணர்வை சற்றே உணர்ந்தவனாய் அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான் அவன்.
பிரதான பாதையை அண்மித்தவனுக்கு சற்றுத்தொலைவில் சுட்டெரிக்கும் வெயிலில் அழுக்காய் ஒரு பெண் தென்பட்டாள்.அவளை நோக்கி நடந்துகொண்டிருந்தவனுக்கு அவளது அழுகையுடன் கூடிய முனகல் தெளிவாய்க்கேட்டது.அந்த ஓசை மனசை சற்றே உலுக்க அவளை நோக்கி பார்வையைக் கூர்மைப்படுத்தினான்.