எவ்வளவுதான் உருகி உருகி கவிதை எழுதினாலும்(அப்படி என்றால் நீ எழுதினது கவிதையா?,ஸ்ஸ்ஸ்....அப்படி எல்லாம் கேட்கப்படாது.),மண்டையை நோண்டி கதை எழுதினாலும்(கதை தேறிட்டோ ,இல்லையோ ;நிறைய முடி உதிர்ந்திச்சு!) ஒரு குறுகிய வட்டம் வந்து பார்த்துவிட்டுச் செல்லும்.ஆனா சினிமா ஸ்டார்கள் பற்றி ஏதாவது கிசு கிசுத்தால் போதும் பார்வையாளர்கள் எண்ணிக்கை எகிறிக்குதிக்கும்.அதனால இடைக்கிடையே நானும் அவர்களின் பெயர்களை என் ப்ளாக்கின் பிரபலத்திற்காக உபயோகின்றேன்.
என்ன பப்ளிக்ல உண்மைய ஒத்துக்கிட்டான்,என்று பார்க்கின்றீர்களா?எல்லாம் ஒரு காரணமாகத்தான்.என் நண்பன் ஒருவன் ஒரு மிகுந்த எதிர்பார்ப்போடு ஒரு கதையை எழுதிப் பதிவிட்டான்.பின் அதை அனைத்து திரட்டியிலும் இணைத்தான்.
அப்புறம்,மொத்தம் 20 பேர் பார்த்தாங்கையா!(நண்பா,ஊரைக்கூட்டி நாறடிக்கான் நாதாரி என்று நினைக்காத.உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கட்டும் என்று தான் இதெல்லாம்.எப்பூடி..............;-))
பதிவில் எப்படி வாசகர்களை சுண்டி இழுப்பது என்பதை அவனுக்கு ப்ராக்டிகலாக புரியவைக்கதான் இந்தப் பதிவு.என் ரசிக மகா ஜனங்களே (அப்படி யாராவது இருக்கிறீங்களா?)என் தலையில் துண்டைப் போடவைத்துவிடாதீர்கள்.
அப்ப தலைப்பு,ஆமாகொஞ்சம் கீழ பாரு கண்ணா......
ஹா ஹா ஹா.....................

.
..
...
....
இப்ப உலகக்கோப்பை கிரிக்கெட்,ரொம்ப சூடா போய்ட்டு இருக்கில்ல.அப்ப இதையும் பார்த்திடுங்க மக்கா

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.:-)