Saturday, May 22, 2010

சினிமாவில் என்னைக் கவர்ந்த ஜோடிகள்


தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜோடிகளைப் பார்த்தாகிவிட்டது.அனால் அதில் ஒரு சில ஜோடிகளே என்றும் நினைவில் பதிந்து இருக்கின்றன.
என்னைக்கவர்ந்த ஜோடிகள்.

1.       கமலஹாசன் – ஸ்ரீதேவி
சிறுவனாக இருந்த போதுதான் மூன்றாம் பிறை படம் பார்த்தேன்.அதில் வரும் கண்ணே கலைமானே பாடல் இன்று வரை மனதை விட்டு அகலவில்லை.அப்பொழுது அந்த காட்சி அமைப்பே அந்த அளவிற்கு மனதை கொள்ளை கொண்டது.அந்த புரியாத வயதிலும் ஏதோ கற்பனை உலகை காட்டியது.(அந்தப்பாடலிற்கு பல சிறப்புக்கள்;கண்ணதாசனின் கடைசிப் பாடல் என்பது கவலை தோய்ந்த சிறப்பு).
அதன் பின்பு கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் நான் ரசித்த படங்கள் ஏராளம்.
(மூன்று முடிச்சு,பதினாறு வயதினிலே ,வாழ்வே மாயம் ,குரு ,சிவப்பு ரோஜாக்கள் ,வறுமையின் நிறம் சிவப்பு,.....)
அன்பே சிவம் படத்தில் கமல் விபத்துக்குள்ளாகும் அந்த லாரியின் பெயர் என்ன தெரியுமா ?
................ஸ்ரீதேவி ...................
கமல் காரணம் இல்லாமல் எதையும் குறீயீடாக பயன் படுத்த மாட்டார் என்பது அவரது படங்களை கூர்ந்து அவதானித்தோருக்கு வெளிப்படை.



2.       கார்த்திக் – ரேவதி
மௌன ராகம் படத்தில் ஹீரோ யார் என்று என்னிடம் கேட்டால் நான் கண்டிப்பாக கார்திக்கைதான் சொல்வேன்அந்த அளவுக்கு அவரின் நடிப்பு அந்தப்படத்தில் என்னைக் கவர்ந்தது.




3.       விஜய் – ஷாலினி
இந்த ஜோடியை யோசிக்கும் போது எப்படி இருந்த விஜய் இப்படி ஆயிட்டாரே என்ற போல இருந்தது.காதலுக்கு மரியாதையில் இந்த ஜோடி அந்த அளவிற்கு ஜொலித்தது.மீண்டும் ஜோடி சேர்ந்த படம் கண்ணுக்குள் நிலவு.இப்ப விஜய் super man, spider man, bat man  வரிசையில் இணைந்தமையால் இனி அவருக்கு ஜோடி ஹொலிவூட்ல தான் கிடைப்பாங்க.



4.       வடிவேலு – கோவைசரளா

நகைசுவையில் இவர்கள் பண்ணிய லூட்டியை மறக்கவே முடியாது.






5.       T.R.ராஜேந்தர் –மும்தாஜ்

ஒரேவரியில் சொல்லப்போனால் Oscar Performance.



T.R  ஐயும் மும்தாஜையும் சேர்த்ததால ஓட்டுப் போடாமல் போயிடாதிங்க.

2 comments:

Chitra said...

கடைசி ஜோடியை பார்த்ததில் மயங்கி விழுந்துட்டேன். .... என்ன பொருத்தம்! அவர்களுக்குள் என்ன பொருத்தம்! :-)

movithan said...

அதை சேர்க்கும் போதே யோசித்தேன் ,இதைப் பார்த்து யாரும் மயங்குவான்களோ என்று ;-))

Post a Comment