Wednesday, May 26, 2010

திருமணமாகாதவள்


அன்று அழகாய் இருந்திருப்பாள்
இன்று அசிங்கமாய் போய்விட்டாள்
வயது முதுமையை நோக்கி நகர
உடலும் தள்ளாட்டம் காண
பார்வையிலே விடை காணா வினாக்கள் நிரம்ப
உள்ள வெறுப்புகள் உதட்டில் நச்சரிப்பாக
ஓயாத புறுபுறுப்பால் பலரைக் குழப்பும்
தன் பிழை உணராத அபலை அவள்

இருப்பது அவள் தங்கை வீட்டில்
தங்கை கணவன் வாய் பேசா ஜீவராசி
வாசியானது அவள் வாழ்க்கைக்கு
வார்த்தையால் பரிதாபப் படுவோர் பலர்
அதுவே அவளை மெல்லக் கொல்லும் விஷம்

வேலைகள் செய்ய மாட்டாள்
வெட்டியே அவள் வேலை
வீண் பேச்சே அவள் தொழில் – ஆனால்
தங்கை பிள்ளைகளை உயிராய் நேசிப்பாள்
தாங்க முடியாத அன்பு – தண்டனையே
புரியா வயதுப் பிள்ளை வார்த்தை
விம்மவைக்கும் அவளை
அவளை சந்தோஷப்படுத்திப் பார்க்க
படைத்தவனுக்கும் தெரியவில்லை போலும்

6 comments:

Priya said...

//வார்த்தையால் பரிதாபப் படுவோர் பலர்
அதுவே அவளை மெல்லக் கொல்லும் விஷம்//.........உண்மைதான் பரிதாபமென்பது கொல்லாமல் கொல்லும் விஷம்தான். நன்றாக எழுதி இருக்கிங்க.

movithan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரியா.
:-)))

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமை . வார்த்தைகள் வலியை ஏற்படுத்துகிறது !

movithan said...

கருத்திற்கு நன்றி,பனித்துளி சங்கர்.

Chitra said...

பாவம்ங்க......உண்மைதான்.... அவர்களின் நிலைமை இன்னும் பரிதாபமான நிலையிலேயே நம்ம ஊரில் இருக்கிறது.....

movithan said...

சித்ரா அக்கா பாக்கவில்லையே எண்டு கவலைப்பட்டன்,:-)

Post a Comment