Tuesday, August 31, 2010

காதல்-உணர்வுகளில் சுருதி

காதல் வலி சொல்லி உங்களை அழுமூஞ்சாக்கும் நோக்கம் எல்லாம்  இல்லைங்க.ஆனால் இந்த வரிகளில் ஏதோ ஒன்று இருக்கிறது.அது உங்கள் உள்ளத்தோடு பேசிவிட்டுச் செல்வதையும் தவிர்க்க முடியாது.நீண்ட காலமாகத் தொகுத்தது.

 

 

****

அன்று நீ என்னை
பற்றி அழுதது
வேசம்......!

என்று சொன்னேன்
...
ஆனால்...!

இன்று தான்
புரிகிறது அது
பாசம்
என்று
அந்த பாசத்திற்காக ஏங்கும் மனம்...!

 

****

உயிரை தொலைத்தேனே
உன்னிடம்
முதல் முறையாக உன்னை
பார்த்த போதே.......

 

 

****

மழையே !

உனக்கும்

மண்ணின் மைந்தர்ரைபோல்
...
காதல் தோல்வியா........

ஏன் ?

கண்ணீர் வடிக்கிறாய்........

 

****

உயிரென்று...!
உன்னை நினைத்து உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்.. எரியலாம்
மெழுகுவர்த்தி போல்
...
ஆனாலும்,
உருகுவதை தவிர்க்கமுடியவில்லை.
அதுபோல்;
உன்னையும் மறக்கமுடியவில்லை...

 

****

கரும்பலகையில் நான் என் பெயரை எழுதுகையில்,

விரல்கள் அவள் பெயரையே எழுதி செல்கிறது...

என்னுள் துவக்கம், அவளுள் முடிவு........


 

****

நினைவுகள் நிறைகின்றன
உன்னை
பிரியும் போது
என் உயிரில்
உறைந்திருக்கும் உன் உயிர்....
அப்போது தெரிந்தது.........



****

அன்று எதிர் பார்த்து வாழ்ந்ததால் ......!

இன்று எமாற்றங்கள் என்னை
வழிநடத்துகின்றன...!

எதிர் பார்ப்புகள் எட்டி பாக்கும் போது
எமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன..!



****

கண்கள் சிந்தும் கண்ணீரில்

கரைந்தோடிடுமா
வலிகளில் ரேகைகள்...!

  

****

நீ பிறக்காமல் இருந்திருந்தால்
நான் உன்னை நினைக்காமல் இருந்திருப்பேன்

நீ பிறந்து விட்டதால் நான் இறந்து கொண்டிருக்கிறேன்...,



****

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்!, ஆனால் என் உயிர்
உன்னோடு இருப்பது யாருக்குத்தெரியும்?.


****

தொட்டுவிட முடியாத உன் நினைவுகள்
மறந்துவிட முடியாத உன் ஞாபகங்கள்
வழி நடத்துகின்றன என்னை
மரண படுக்கையை நோக்கி....



****

நீ என்னை நினைக்கும்
நிமிடத்தில் நான்
இறந்துவிடுவேனோ தெரியாது .....!
-
ஆனால்
நான் இறக்கும் நிமிடத்திலும்
உன்னை நினைத்துக்கொண்டுதான்
இருப்பேன் ...................!



****

நினைவு என்னும் கடலில் - நீ இருக்க
நித்திரை இல்லாமல் நான் துடிக்க - இல்லை

என்று தெரிந்தும் கூட முடியவில்லையே
பார்க்காமல் இருக்க.....................

 

****
நேற்று என்னை சிரிக்க வைத்தாய்
இன்று நீ அடக்க மாகி விட்டாய்.
நான் அழுகிறேன்..........
இன்று உன் கல்லறை முன்பு
என் கண்ணீர் துளிகள்....

உன் நினைவுகள் என்றென்றும்
எனக்கு வழி துணையாய்......??????????



4 comments:

Chitra said...

கண்கள் சிந்தும் கண்ணீரில்
கரைந்தோடிடுமா
வலிகளில் ரேகைகள்...!


......அருமையான கவிதைகள். காதலின் பல கட்ட உணர்வுகளுடன், அழகாய் வந்திருக்கிறது. பாராட்டுக்கள்!

movithan said...

@Chitra
கருத்திற்கு ரொம்ப நன்றி அக்கா.

யாருமே ரசிக்கவில்லையே எண்டு வேதனைப்பட்டேன்.உங்கள் கருத்து ஆறுதலாக உள்ளது.

Unknown said...

Superb..

movithan said...

@nishanthini
thanx.

Post a Comment