Tuesday, April 13, 2010

நான் ரசித்த திரைப்படம்


அங்காடித்தெரு படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு நேற்றுத்தான் கிடைத்தது.இப்படத்தை பார்த்தே ஆகவேண்டும் என நான் முனைப்புக் காட்டியதற்கு காரணமே சக பதிவாளர்களின் விமர்சனமே.காலம் தாழ்த்தி நானும் அதற்கு விமர்சனம் எழுத வேண்டுமா ? என் சிந்தித்த எனக்கு என் மனதின் உத்தரவு ஆமா என்று இருத்தது.

என் பார்வையில் ஒரு யதார்த்தமான திரை ஓவியத்திற்கு அறிமுக ஹீரோவே நச்.ஏனெனின் பிரபல ஹீரோ என்றால் அவரின் முன்னைய படங்களின் தாக்கம் இருக்கும்.
Banner: Ayngaran International
Production: Karunakaran, Arun Pandian
Direction: Vasantha Balan
Star-casts: Magesh, Anjali, A. Venkatesh and others
Music: Vijay Anthony and G.V. Prakash
அந்த வகையில் கதாநாயகன் ,கதாநாயகி தெரிவு அருமை. மகேஷ்,அஞ்சலியின் காதல் சிணுங்கலுடன்  ஆரம்பித்த படம் சற்றுமே எதிர்பாராத விபத்தின் மூலம் எம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.அந்தக்காட்சியில் இருந்து அவர்களின் கடந்த காலத்திற்குள் தாவினாலும் முடிவு வலிக்குமே என மனது உணர்த்தி விடுகிறது.


வீட்டுச்சூழ்நிலை காரணமாக சென்னை வரும் அவர்களுக்கு வெளியில் நின்று பார்த்தபோது அந்தக்கடையின் பிரமாண்டம் எப்படி மயக்கியதோ ,உள்ளே சென்றவுடன் அவர்கள் கனவுகள் ஒன்றொன்றாக தகர்க்கிறது.அண்ணாச்சியின் வன்முறை வரம்புமீறல்.ஆனால் அதை மிகைப்படுத்தல் என்று சொல்லமுடியாது.மனித உருவில் பல மிருகங்கள் ஜீவிப்பது நிஜம்.ஒரே வலியை அனுபவிக்கையில் அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஏற்படுவது இயல்பே.


அஞ்சலி தனது வலியை நீர் முட்டிய கண்ணோடு மகேஷிடம் சொல்லிக்கொண்டே வாடிக்கையாளரிடம் யதார்த்தமாக பேசுவது அவரின் நடிப்புக்கு ஒரு பளிச்.
 பொதுவாகவே முதல் காதலையே ரோஜாவில் விழுந்த பனித்துளி போல அழகாக பார்த்த எமக்கு இவர்கள் இரண்டாவது காதல் ரோஜா பூச்செண்டு போல மிளிர்வது இயக்குனரின் கைவண்ணமே.
அங்கே வேலை செய்த பெண்ணின் காதல் நிருபணம் கோழைக் காதலர்களுக்கு ஒரு நெற்றியடி.இரத்த பாசத்தை அண்ணா வேலை செய்யும் கடையின் பையின் மீது காட்டும் அத்தங்கையின் காட்சிப்படைப்பு நல்லதொரு குறியீடு.
பாடல்கள் காட்சியோடு ஒன்றிப்போவதால்(வெளிநாட்டு  கலைஞர் ஹீரோ பின்னாடி ஆடவில்லை,சென்னையில் இருந்து திடீர் என பைசா கோபுரத்துக்கு எஸ்கேப் ஆகவில்லை) ரசிக்க வைக்கின்றது.அவள் அப்படியொன்றும்,உன் பெயரைச்சொல்லும் போதே,எங்கே போவேனோ பாடல்கள் மேலடியாய் நெஞ்சுக்குள் ரீங்காரமிடுகின்றன.விஜய் அன்டனி மேலடியிலும் அசதி இருக்கிறார்.வெயிலைப்போலவே ஜி.வி.பிரகாஷு இதிலும் வசந்தபாலனுக்கு தோள் கொடுத்திருக்கிறார்.
மகேஷ் தன் காதலைப் புரியவைக்க நள்ளிரவில் மகளிர் ஹாஸ்டல் சென்று உணர்வாய் பேசுவதும் தமிழ் ஹீரோக்கள் பத்து தடியர்களை ஒரே அடியில் திணறடிப்பதை விட வீரமாய் தெரிகிறது.மகேஷின் நண்பனாய் வரும் பாண்டி கனாக்காலத்தில் இருந்த இருந்த பிரியத்தை மேலும் அதிகப்படுதுகிறார்.
அடியின் வலிக்கோ,சூழ்நிலைக்கோ பயந்துவிடாமல் தன் எண்ண ஓட்டத்தை விளிப்படுத்தும் காட்சியில் மகேஷின் நடிப்பு சூப்பரோ சூப்பர்.நடிப்பு என்று தெரியவேயில்லை.
அத்தனை வலிகளையும் அவர்களோடு சேர்ந்து அனுபவித்த எமக்கு வசந்தபாலன் இறுதியில் தந்த வலி சற்று அதிகமே.ஆனாலும் முடிவு ஏற்புடைய ஒன்றே.
நோயாளிக்கே வைத்தியன் தேவை,வாழ்கையில் சோர்ந்து போய் இருப்பவனுக்கு இப்படம் தன்னம்பிக்கை ஊட்டும் என்பது நிஜம்.
உண்மையிலே இத்திரைக்காவியத்தை வடிவமைத்தமைக்காக வசந்தபாலன் அவர்களை பாராட்டியே தீரவேண்டும்.   



0 comments:

Post a Comment